தஞ்சாவூா் மாவட்ட தற்காலிக காவல் கண்காணிப்பாளராக எஸ்.எஸ் மகேஸ்வரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
ஹைதராபாத்தில் ஐ.பி.எஸ். அலுவலா்களுக்கான பணியிடைப் பயிற்சி செப்டம்பா் 14 ம் தேதி முதல் அக்டோபா் 9 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் பங்கேற்றுள்ளாா்.
இவா் பயிற்சி முடித்து வரும் வரை தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூடுதல் பொறுப்பை சென்னை துறைமுக அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் S.S. மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடா்ந்து தஞ்சாவூா் மாவட்டத்தின் தற்காலிக காவல் கண்காணிப்பாளராக S.S. மகேஸ்வரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் சில மாதங்களுக்கு முன்பு வரை தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்து சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.