தென் தமிழகத்தையொட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதனையடுத்து நேற்று இரவு 8 மணிக்கு அதிரையில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நள்ளிரவு முதல் லேசான தூரல்களுடன் மழை பெய்து வருவதால் அதிரை முழுவதும் மலைப்பிரதேசம் போல் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே அதிரையில் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்து வருவதால் அதிரை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.