தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளை 1 மற்றும் 2 மற்றும் தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய 83வது இரத்ததான முகாம் அதிரை ஆயிஷா அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
இம்முகாமிற்கு ததஜ-வின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கே. ராஜிக் முஹம்மது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். இதில் ஜாதி, பேதமின்றி 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இரத்ததானம் வழங்கினர். இதில் அதிரை கிளை நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை அதிரை கிளை மாணவரணி மற்றும் மருத்துவ அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.