தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை 28.07.2020 அன்று பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை 28.07.2020 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுக்கூர் உதவி செயற்பொறியாளர் அவர்களின் அறிவிப்பின் படி அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரமான அத்திவெட்டி, முத்துப்பேட்டை, பெரியகோட்டை, மதுக்கூர், கன்னியாகுறிச்சி, காடந்தகுடி, துவரங்குறிச்சி, ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.