தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் அருகே அமைந்துள்ள மல்லிப்பட்டிணம் துறைமுகத்தின் நடைபாதை நான்காவது முறையாக இடிந்து விழுந்தது.
கடந்த ஆண்டு காணொலி வாயிலாக 60 கோடி செலவில் கட்டப்பட்ட மல்லிப்பட்டிணம் துறைமுகத்தை திறந்து வைத்தார். செயல்பாட்டில் இருந்து வந்த துறைமுகம் சுற்றுவட்டார வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் என நாள்தோறும் வந்து செல்லும் பகுதியாக இருக்கிறது.
இந்நிலையில் இன்று(ஜூலை.16) துறைமுக நடைப்பாதை இடிந்து விழுந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.அந்தபகுதியில் யாரும் நடமாட்டம் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.இடிந்து விழுவது முதல்முறையல்ல ஏற்கனவே மூன்று முறை விழுந்தது, இது நான்காவது முறையாகும்.
அடிக்கடி விழும் நடைப்பாதையை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.