தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் நான்காவது வார்டு உறுப்பினராக இருக்கும் L.M.A.அபுபக்கர் தாமாக முன்வந்து SDPI கட்சியில் மாவட்ட செயலாளர்கள் முகமது அஸ்கர்,முகமது ரஹீஸ் முன்னிலையில் இணைந்துக் கொண்டார்.கட்சியின் உறுப்பினர் அட்டையை மல்லிப்பட்டிணம் நகரத்தலைவர் அப்துல் பஹத் வழங்கினார்.இந்நிகழ்வில் மல்லிப்பட்டிணம் நகரச்செயலாளர் ஜவாஹீர் மற்றும் புதுப்பட்டிணம் கிளைத்தலைவர் சுல்தான் கலந்துக்கொண்டனர்.