தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மதுக்கூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.சுகாதாரத்துறையினர் மூலமாக காவல்நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து மூடி சீல்வைக்கப்பட்டது.மேலும் காவலர்கள் தங்கி இருந்த பகுதியிலும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டது.