Friday, March 29, 2024

செஞ்சி திமுக எம்எல்ஏ-விற்கு கொரோனா உறுதி !

Share post:

Date:

- Advertisement -

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மிக மோசமானதாக இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,29,893 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 16,112 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் தமிழகத்தில் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் உயிரிழந்தார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தமானாஷ் கோஷ் மரணமடைந்தார்.

தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு அதி உச்சமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியானது. அவருக்கு கோவை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசுவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. மஸ்தானுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.

இதனால் அவர் சென்னை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்படுகிறார். திமுகவில் கொரோனா பாதிப்புக்குள்ளான 4-வது எம்.எல்.ஏ. மஸ்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...