அதிரை தன்னார்வலர்கள் குழுவின் சார்பில் இன்று காலை 8 மணியளவில் பேருந்து நிலையத்தில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.
அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், வியாபாரிகள், காவல்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயமோகன், அதிரை தன்னார்வலர்கள் குழுவின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.