பட்டுக்கோட்டையில் இயந்திரத்தில் கைமாற்றித் துண்டான பெண்ணிற்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரி நகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் பின்பு உள்ள மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்தெடுக்கும் நுண் உரம் செயலாக்க மையத்தில் கடந்த 18ம் தேதி ரேவதி என்ற பெண் ஊழியர் பணி செய்தபோது திடீரென எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் கைமாற்றித் துண்டானது மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று சிஐடியு உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத்தினர் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட அவர்களை வேறு பணிக்கு அனுப்பக் கூடாது என்றும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.