Friday, April 19, 2024

பட்டுக்கோட்டை நகராட்சி முன்பு சிஐடியு அமைப்பினர் போராட்டம்!

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டையில் இயந்திரத்தில் கைமாற்றித் துண்டான பெண்ணிற்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரி நகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் பின்பு உள்ள மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்தெடுக்கும் நுண் உரம் செயலாக்க மையத்தில் கடந்த 18ம் தேதி ரேவதி என்ற பெண் ஊழியர் பணி செய்தபோது திடீரென எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் கைமாற்றித் துண்டானது மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று சிஐடியு உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத்தினர் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட அவர்களை வேறு பணிக்கு அனுப்பக் கூடாது என்றும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...