தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் அருகே கடலில் கரை ஒதுங்கிய இராமேஸ்வரம் மீனவர் உடல் மீட்பு.
கடந்த ஜூன் 13ம் தேதி அன்று 800 க்கும் மேற்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர், ஹெட்ரோ என்பவருக்கு சொந்தமான படகு மற்றும் படகில் சென்ற மலர் வண்ணன் 47 , ரெஜின் பாஸ்கர் 43 , சுஜிந்தர் 19 , சேசு 53 ஆகிய மீனவர்களும் கரை திரும்பவில்லை , இந்நிலையில் சேசு என்ற மீனவர் மட்டும் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டணத்தில் மீனவர்களால் மீட்கபட்டார்,
அவர் அளித்த தகவலின் படி சனிக்கிழமை இரவே காற்றின் சீற்றத்தால் படகு கவிழ்ந்ததாகவும், யாரும் உதவிக்கு வராத சூழலில் மூழ்கிய படகின் எஞ்சிய பலகையையும், ஐஸ்பெட்டிகளையும் பிடித்து கொண்டே 48 மணிநேரம் நடுக்கடலில் தத்தளித்தோம், நான் மீட்டெடுக்க சூழலில் மீதமுள்ள மூன்று மீனவர்கள் நிலை குறித்து தெரியவில்லை என்றும் சேசு கூறினார்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் அருகே கொள்ளுக்காடு கடலில் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது,மீன்வளத்துறை அதிகாரிகள்,காவல்துறையினர் இணைந்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்வு முடித்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.இன்னும் இருவரின் உடல்களை தேடும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது.