தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் அமைந்துள்ள துறைமுகம் மற்றும் மனோரா சுற்றுலா தளங்களை மாவட்ட துணை ஆட்சியர் அமித் IAS ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆய்வு செய்தார்.
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் அமையவிருக்கும் பூங்கா குறித்தும்,மனோரா நினைவுச்சின்னம் குறித்தும் விரிவாக அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைகள் நடத்தினார்.இதில் 20 லட்சம் செலவில் அமைய போகும் புதிய பூங்காவிற்கான வரைபடங்களையும் பார்த்தார்.இந்நிகழ்வில் பிடிஓ கோவிந்தராஜ்,தமிழ்நாடு மீனவ பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜுதீன்,ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா,AD சிவக்குமார்,பொறியாளர் அருண்,I.F கங்கேஷ்வரி மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாசிலாமணி ஆகியோர் உடனிருந்தனர்.