தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. தொற்று நோய் கட்டுப்படுத்த அதிகமாக மக்கள் கூடும் இடமான ஷாப்பிங் மால் , பேருந்து நிலையங்கள் , வழிப்படுத்தளங்கள் , மதுபான கடைகள் போன்ற இடங்களில் திறப்பதற்கும் செலுவதற்கும் தடைவிதித்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு சில விதிமுறைகள் கொண்ட கட்டுப்பாடுகள் அடிப்படையில் தளர்வுகள் அறிவித்தனர். அரசு அறிவிக்கப்பட்ட தடைகளிலிருந்த ஷாப்பிங் மால் , மதுபான கடைகள் பேருந்து நிலையங்கள் தளர்வுவின் காரணமாக சிலது திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனையடுத்து இந்து,முஸ்லீம், கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து வழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.