சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் ஒரு கர்ப்பிணி யானைக்கு வெடிகுண்டு வைத்து கொடுத்ததால் வாய் சிதறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது
அதேபோல் நேற்று கர்நாடகா சிக்கமாகளூரு தாலுக்கா பசரவல்லி கிராமத்தை சேர்ந்தவரின் 3 பசுக்கள் அருகில் உள்ள தோட்டத்தில் மேய சென்றது.
அங்கிருந்த பலாப்பழத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மூன்று பசுக்களும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தன.
பிறகு தகவலறிந்த பசுவின் உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அடிக்கடி தோட்டதுக்குள் சென்று மாடுகள் மெய்வதால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், பலாப்பழத்தில் விஷம் வைத்து அவற்றை கொன்றது தெரியவந்தது.