குழந்தைகள் உடல் நலனின் தீங்கு விளைவிக்கக்கூடிய சில உணவு பொருட்களை தடை செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக பலரும் கோரிக்கை வைத்த வன்னம் இருந்தனர்.
கடைகளில் வண்ண வண்ண பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யக்கூடிய லேஸ்,குர்குரே போன்ற நொறுக்கு தீனிகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை விரும்பி உண்ணப்படும் பொருளாக இருந்தன.
இந்நிலையில் தமிழக அரசு இன்று உயர்நீதிமன்ற வழிகாட்டல் பிரகாரம் தமிழகத்தில் பிளாஸ்டிக் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் லேஸ்,குர்குரே போன்ற ஜங்க் உணவுகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
முன்னதாக தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது, இதில் கார்பரேட் நிறுவன தயாரிப்புகளை சேர்க்க வேண்டும் என எழுந்த கோரிக்கையை அடுத்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆனை பிறப்பிக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக இன்று முதல் கடைகளுக்கு புதிதாக இந்த வகை ஜங்க் உணவு பொருட்கள் கிடைக்காத சூழல் நிலவுகிறது.