Friday, April 19, 2024

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை !

Share post:

Date:

- Advertisement -

4 ஆம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

சென்னை தலைமைச்செயலகத்தில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, வல்லரசு நாடுகளை விட, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகள் குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டார். உயிரிழப்புகள் குறைவு என்பதால், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துள்ள முதலமைச்சர், மருத்துவர்களின் அயராத பணியால் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார். 

சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமே, கொரோனா அதிகரிக்க காரணம் என்றும் கூறினார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களாக இலவசமாக பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், 35 லட்சத்து 65 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலா 2000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

170 ரயில்கள் மூலம் 2 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கால் மக்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே, அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைத்து வருவதாகவும், அவற்றின் விலை உயராமல் கட்டுக்குள் இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...