தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகில் ஊரணிபுரத்தில் இயங்கிவரும் ஜோதி உதவி பெறும் நடுநிலை பள்ளியில் அந்த பள்ளியில் பயிலும் 300 மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ 1000 மதிப்பிலான கொரோனா பேரிடர் நிவாரண பொருட்களை மாவட்ட கல்வி அலுவலர் மா.இராமகிருஷ்ணன் வழங்கினார். வெட்டுவாக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் இரா.மதியழகன்.வட்டார கல்வி அலுவலர் வெ.மனோகரன், மாவட்ட இளயோர் செஞ்சிலுவை சங்க அமைப்பாளர் செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கசி.செல்வம் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.