கொரோனா வைரஸின் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளர்கள் வேலைகள் இன்றி முடங்கியுள்ளனர். இதனால் அவர்கள் சாப்பாடின்றி பட்டினி நோன்பு வைப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அதிரை ஏரியா சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு சமைப்பதற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.