Friday, April 19, 2024

டெல்லி விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 5 லட்சம் முக கவசம், பறிமுதல் செய்தது சுங்கத்துறை..!!

Share post:

Date:

- Advertisement -

டெல்லி விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 5 லட்சம் முக கவசங்களை சுங்கத்துறையினர் பரிமுதல் செய்தனர்.

டெல்லி விமான நிலைய சரக்கு முனையத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த பொருட்களை சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த பார்சல்களில் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து இத்தகைய பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதனை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில் 2,480 கிலோ அளவில் முக கவசம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சந்தேகத்துக்கிடமாக இருந்த பெட்டிகளை சோதனையிட்டதில், சுமார் 5 லட்சம் முக கவசங்கள், 57 லிட்டர் சானிடைசர், 952 பி.பி.இ. கிட் எனப்படும் பாதுகாப்பு உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தையும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source: Dailythanthi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...