சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிப்பேட்டை, விருதுநகர், வேலூர், திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.இங்கு மே4ம் தேதி முதல் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது
தேனி, தென்காசி, நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்பரம், கோவை, கடலூர், சேலம் கருர், தூத்துக்குடி, திருச்சி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், திருநெல்வேலி, நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் தருமபுரி என 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளன. இங்கு மே 4ம் தேதி முதல் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பச்சை மண்டலங்கள் : தமிழகத்தில் பச்சை மண்டலங்கள் என்ற பட்டியலில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே உள்ளது. இங்கு கொரோனா யாருக்கும் பாதிக்கவில்லை எனவே இந்த ஒரு மாவட்டத்தில் மே 4ம் தேதி முதல் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு குறித்து நாளை மே 2ம் தேதி முதல்வர் அமைச்சரவை ஆலோசனைக்கு பின்னர் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.