Thursday, March 28, 2024

கொரோனாவில் இருந்து நாட்டை மீட்ட பெண் பிரதமர், உலக நாடுகள் பாராட்டு…!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நியூசிலாந்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். 

நியூசிலாந்து நாட்டில் கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களிலேயே அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக அங்கு வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. 

இதுவரை அங்கு வைரஸ் காரணமாக 1,500பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதோடு அதில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் நேற்று ஊடகத்தினரிடம் பேசும்போது, கொரோனா தொற்றின் சமூகப் பரவலை முழுமையாக தடுத்து விட்டதாகவும் புதிய நோயாளிகள் யாரும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து இன்று காலை முதல் அங்கு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். மேலும் தொழில் துறைகளும் இயங்கத் தொடங்கியுள்ளதோடு சில பள்ளிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களும் உணவகங்களும் அங்கு திறக்கப்பட்டுள்ளன. 

நியூசிலாந்து அரசின் இந்த வெற்றிக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...