நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்துள்ளது. காலை 10.30 மணி நிலவரத்தின்படி 5 மாநிலங்களிலுமே பிஜேபி பின்னடைவை சந்தித்துள்ளது. ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசத்தில் காங்கிரசும், தெலுங்கானாவில் டிஆர்எஸ்-சும், மிசோரமில் எம்என்எப்-உம் முன்னிலையில் உள்ளன.