Friday, April 19, 2024

என்னையே கண்காணிக்கிறாயா என்று ட்ரோன் கேமரா மீது கல்வீச்சு, இளைஞர் கைது…!

Share post:

Date:

- Advertisement -

சீர்காழி அருகே ஊரடங்கை கண்காணித்த காவல்துறை ட்ரோன் கேமராவை கல்வீசித் தாக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஊரடங்கை மதிக்காமல் சுற்றி திரிபவர்களை போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர். கடந்த 24-ஆம் தேதி எடமணல் கிராமத்தின் வயல் வெளியில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடினர். அப்போது அவர்களை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர்.

இதனை அறிந்த அனைவரும் வயல்வெளியில் இருந்து தப்பியோடினர். அதில் ஒருவர் ட்ரோன் கேமரா மீது கல்லால் தாக்க முயற்சித்தார். ஆனால் கேமரா அருகே வந்ததும் அவரும் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் வயல் வெளியில் கிரிக்கெட் விளையாடிய 10 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்த சீர்காழி போலீசார் அவர்ளை வீட்டிலிருப்போம், விலகியிருப்போம், கிரிக்கெட் விளையாட மாட்டோம் என உறுதி மொழி ஏற்கவைத்து எச்சரித்து அனுப்பினர்.

மேலும் கேமராவை தாக்க முயற்சித்த எடமணல் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற இளைஞரை சீர்காழி போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...