தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா எதிரொலியாக அதிராம்பட்டினத்தில் வாகன தணிக்கை தீவிரம்.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது,இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிரையில் காவல் ஆய்வாளர் ஜார்ஜித் ராஜா தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது அரசு அனுமதி அளித்த நபர்கள் தங்களது அடையாள அட்டையை காட்டிய பிறகே சம்பந்தப்பட்ட நபர்களை வாகனங்களில் செல்ல அனுமதிக்கின்றனர். மற்றவர்கள் யாரையும் போலீசார் வாகனங்களில் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.மேலும் காரணமின்றி சுற்றுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர்.