Thursday, April 18, 2024

கொரோனாவைவிட ஆபத்து மாஞ்சா! பெற்றோரே உஷார்!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா என்னும் கொடிய வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க உலக நாடுகளிடம் இருக்கும் ஒரே மருந்து, மக்களை வெளியே அனுமதிக்காமல் வீட்டிலேயே இருக்க வைப்பதுதான். இதனாலேயே உலகின் பல்வேறு நாடுகளிலும், இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களும் அரசின் ஊரடங்கை ஏற்று வீட்டிலேயே இருந்து வருகின்றனர். அவ்வாறு வீட்டிலேயே இருப்பவர்கள் பெரும்பாலும் தங்கள் கைப்பேசியை உபயோகித்தே நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் தங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுகளை கையிலெடுத்து நேரத்தை செலவிட தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் தற்போது அதிகப்படியான மக்கள் குறிப்பாக சிறுவர்கள், இளைஞர்கள், மொட்டை மாடியில் நின்று பட்டம் விடுவதை கையிலெடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக சுமார் 50க்கும் மேற்பட்ட பட்டங்கள் அதிரை வானில் தென்படுகின்றன.

சரி விசயத்திற்கு வருவோம்!

மொட்டை மாடியில் நின்று பட்டம் விடுவதில் தவறில்லை. ஆனால் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட்டால் அது பெரும் அசம்பாவிதத்தில் முடிய வாய்ப்புள்ளது. ஏனெனில் மாஞ்சா நூல் உயிரை பறிக்கும் வல்லமையுடையது.

பட்டம் விட மாஞ்சா நூலை பயன்படுத்தி, அது எதிர்பாராதவிதமாக எங்கோ சென்று கொண்டிருக்கும் ஒருவரின் கழுத்தை அறுத்து, ரத்தம் அதிகமாக வெளியேறி உயிரே பிரிந்த சம்பவங்கள் தமிழகத்தில் ஏராளம்.

அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் ஓரமாக எடுத்துப்போட்ட மின் கம்பத்தில் சிக்கி இருந்த மாஞ்சா நூல்

இதனை கருத்தில் கொண்டே மாஞ்சா நூல் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பட்டம் விடலாம்.. தவறில்லை.. ஆனால் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விடுவது தவறு மட்டுமல்ல.. ஆபத்தானதும் கூட..

பட்டம் தானே விட்டுக்கொண்டிருக்கிறான் என பெற்றோர்கள் அலட்சியமாக இருந்துவிடாமல், எவ்வாறான நூல்களை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகள் பட்டம் விடுகிறார்கள் என்பதை கண்காணிப்பது அவசியம். வியாபாரிகளும் உயிர் கொல்லியான மாஞ்சா நூல்களை விற்காமல் இருப்பது சாலச்சிறந்தது.

விளையாட்டு வினையாகிவிடக்கூடாது…

– அதிரை அன்சர்தீன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...