அதிரைக்கான வழக்கமான மின்சாரம் காரைக்குடியில் இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த லைன் பழுதடைந்துவிட்டதால், தற்போது திருவாரூரில் இருந்து மின்சாரம் பெறப்படுவதாக மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார். இதனிடை திருவாரூர் லைனும் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் அடிக்கடி அதிரையில் மின் தடை நிகழ்வதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.