Wednesday, April 24, 2024

மல்லிப்பட்டினத்தில் நாளை முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை – குழப்பத்தில் பொதுமக்கள் !

Share post:

Date:

- Advertisement -

கொரோனா தொற்றின் பரவலையடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வருவதற்குண்டான வண்ண அட்டைகளை ஒவ்வொரு பகுதிக்கும் அதிகாரிகள், ஊராட்சி பணியாளர்கள் மூலம் கொடுக்கப்பட்டது.

அதன்படி மல்லிப்பட்டிணம் பகுதியில் வெள்ளி மற்றும் செவ்வாய் மட்டுமே வெளியே வருவதற்குண்டான அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்கி இருக்கிறது. மேலும் அனைத்து கடைகளையும் திறக்க கூடாது என்றும், மருந்தகங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து உத்தரவிட்டு சென்றுள்ளனர்.

மேலும் இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும் என்றும், நாளையில் இருந்து கண்காணிப்பை தீவிரப்படுத்த காவல்துறையினருக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று திடீரென இவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மல்லிப்பட்டினத்தில் பொதுமக்கள் மத்தியில் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு நாளை பகல் 1 மணி வரை கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...