Thursday, April 18, 2024

அதிரையரின் பணிக்கு வேட்டுவைத்த வாட்ஸ்அப்!

Share post:

Date:

- Advertisement -

முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அதிரையிலும் ஆயிரக்கணக்கானோர் அடிமையாகி உள்ளனர். குறிப்பாக ஏன் நாம் அதனை பயன்படுத்துகின்றோம் என்ற புரிதல் கூட இல்லாமல் பலர் இருக்கின்றனர். இதனால் அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களிலும் தேவையின்றி சமூக வலைத்தளங்களை நாம் பயன்படுத்தும் சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், துபாயின் பிரபல நிறுவனத்தில் பணிப்புரியும் அதிரையர் ஒருவர், அலுவலக நேரத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ப்ராஜெக்ட் டிஸ்கஷனில் தன்னையும் மறந்து வாட்ஸ்அப் க்ரூப்களை பார்த்துக்கொண்டிருந்த அவரை கவனித்த டீம் லீடர், இதுகுறித்து தனது மேனேஜரிடம் புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து அதிரையருக்கு அந்த நிறுவனம் மெமோ கொடுத்துள்ளது. இதனால் அவரின் புரோமோசன் பாதிக்கப்படும் என வேதனையுடன் கூறிய உறவினர், தேவையற்ற வாட்ஸ்அப் க்ரூப்களில் இல்லாமல் இருப்பது நல்லது என தெரிவித்தார்.

இது ஒருபுறம் என்றால், நாம் அதிகளவிலான க்ரூப்பில் இருப்பதால் சில முக்கியமான தகவல்கள் பத்துடன் பதினொன்றாக நமது கண்ணில் படாமல் இருந்து விடுகிறது. இதனை தடுக்க தேவையற்ற க்ரூப்களில் இருந்து வெளியேறிவிடுவது நம் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட உதவுவதுடன் வாட்ஸ்அப்பை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...