Saturday, April 20, 2024

அதிரையில் ஊரடங்கை கண்காணித்த காவல்துறையின் கழுகு கண் காமிராக்கள் !(வீடியோ இணைப்பு)

Share post:

Date:

- Advertisement -

உலகை அச்சுறுத்தி கொண்டுள்ள கொரோனா தொற்றால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது.

ஆனால் அதிரையில் சில இடங்களில் இந்த ஊரடங்கை மதிக்காமல் இளைஞர்கள் மைதானங்களில் விளையாடுவதாகவும்,பொதுமக்கள் மாலை நேரங்களில் சிலர் வீதிகளில் நடமாடுவதாகவும் காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள அதிரை நகர காவல் எல்லைகளை கண்காணிக்க கேமிரா பொருத்தப்பட்ட ட்ரோன் வரவழைக்கப்பட்டு கண்கானித்து வருகின்றனர்.

எனவே பொதுமக்கள் காவல்துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பை நல்கவும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் மட்டுமே வீதிகளுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் ஜெயமோகன் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த இடைக்கால சட்டத்தை மீறுவது சட்டப்படி குற்றம் எனவும், இவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக இரண்டாண்டுகள் வரை சிறைவாசம் அணுபவிக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், நீங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்துகிறார்கள்.

வீடியோ :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...