தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
அரசின் உத்தரவை ஏற்று அதிரையர்கள் வீட்டிலேயே முடங்கிடக்கின்றனர். அவர்களின் நேரங்கள் பயனுள்ளதாக அமையும் வகையில் அதிரை எக்ஸ்பிரஸ் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
அதன்படி எக்ஸ்பிரஸ் நேரம் என்னும் பெயரில் வார நிகழ்ச்சி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம், இரத்ததானம், சுற்றுச்சூழல், கல்வி , விளையாட்டு, வரலாறு, அரசியல், சட்டம் ஆகிய துறைகள் குறித்து அதன் துறை சார்ந்த நிபுணர்கள் உங்களின் கேள்விகளுக்கு நேரடி ஒளிபரப்பில் பதிலளிக்க உள்ளனர்.
நமது எக்ஸ்பிரஸ் நேரம் நிகழ்ச்சியில் முதல் ஒளிபரப்பாக சென்ற வாரம் குழந்தைகள் நல மருத்துவர் பதிலளித்தார்.
இந்த வாரம் எக்ஸ்பிரஸ் நேரம் நிகழ்ச்சியில் கல்வி பற்றி அதன் நிபுணர் தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.
அதிரையர்களே… உங்களுக்கு இருக்கும் சந்தேங்களை கல்வி நிபுணரிடம் கேள்வியாக கேட்கலாம். உங்கள் கேள்விகளை அதிரை எக்ஸ்பிரஸ் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பிவைக்கலாம்.
உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்ப : +91 9551070008