தஞ்சை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவினர்.
கொரோனா பேரிடரால் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவையடுத்து அன்றாட தேவைக்கு அவதிக்குள்ளாகும் பொதுமக்கள் உதவிகள் பெற திமுக இளைஞரணி சார்பில் உதவி எண்களை உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
மல்லிப்பட்டிணத்தில் இருந்து மாவட்ட ஹெல்ப் லைன் எண்ணை தொடர்பு கொண்டு உதவிகளை கேட்டிருந்தனர்.அதனடிப்படையில் அத்தியாவசிய பொருட்களை திமுக இளைஞரணி சார்பில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேராவூரணி பேரூராட்சி முன்னாள் தலைவர் அசோக்குமார், சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம் மற்றும் இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் ஹபீப் முகமது ஆகியோர் வழங்கினர்.