Friday, April 19, 2024

27ஆண்டுகளுக்கு பின் ஈராக்கிற்க்கு நேரடி விமான சேவையை சவூதி வழங்கியுள்ளது.

Share post:

Date:

- Advertisement -

சவுதி அரேபியாவின் பிளைனாஸ் விமான நிறுவனம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஈராக்கிற்கு நேரடி விமான சேவையை வழங்கி உள்ளது.

ஈராக் அதிபர் சதாம் உசைன் 1990-ஆம் ஆண்டு குவைத் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து ஈராக் உடனான விமான சேவைகளை சவுதி அரேபியா நிறுத்தியது.

தற்போது அரபு பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கு அதிகரித்து வருவதைத் தடுக்கும் நோக்கில், ஈராக்குடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொள்ள சவுதி அரேபியா விரும்புகிறது.

இதற்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஷியா மதகுரு உள்ளிட்ட ஈராக் உயர் தலைவர்கள் சிலர் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டது நல்ல சூழலை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், இரு நாட்டு உறவு துளிர்விடத் தொடங்கியதை பிரதிபலிக்கும் வகையில் சவுதி அரேபியாவின் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான பிளைனாஸ், ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு நேரடி விமான சேவையை தொடங்கி உள்ளது.

27 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பாக்தாத் செல்லும் முதல் விமானம் புறப்பட்டதும் இந்த தகவலை டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பிளைனாஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...