கடந்த 13 ஆண்டுகளாக உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார நிகழ்வுகளை எந்தவித தொய்வுமின்றி அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் பதிந்து வருகிறது. தன்னார்வலர்களால் நடத்தப்படும் அதிரை எக்ஸ்பிரஸ்-க்கு நாளுக்குநாள் வாசகர்களின் எண்ணிக்கையும் பெருகிய வண்ணமே உள்ளன. இதன் வெளிப்பாடாக அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளது. ஏற்கனவே அதிரை எக்ஸ்பிரஸ் செயலியை ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் சூழலில், தற்போது முகநூல் பக்கத்தின் பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் மூலம், அதிரையின் மாபெரும் ஊடக சக்தியாக அதிரை எக்ஸ்பிரஸ் திகழ்கிறது.
இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் வாய்ப்பை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் , முத்துப்பேட்டை இளைஞர்களுக்கு வழங்க அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகம் எப்போதும் தயாராகவே உள்ளது. அதன்படி தினசரி வாசிப்பு பழக்கத்துடன் சமூக சிந்தனை மற்றும் ஊடக ஆர்வம் உள்ள இளைஞர்கள் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம்…
ஆர்வமுடையவர்கள் 95510 70008 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்புக்கொள்ளவும்…