அதிராம்பட்டினத்தில் கொரோனா தொற்று உள்ளது என கிளப்பிவிடப்பட்ட வதந்தியை அடுத்து, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு வரும் செவிலியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.
இந்நிலையில் அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலரை தொடர்புகொண்டு பேசிய அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம், அதிராம்பட்டினத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா நோய் தொற்று இல்லை எனவும்,வீணான வதந்திகளை பரப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கிராம அதிகாரி எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.