தஞ்சை மாவட்டம்: அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இன்று (22-03-2020) மாலை கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது ஆட்டோவிற்கு பின்பு வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனமானது ஆட்டோ வளதுபுரமாக திரும்பியதை கவனிக்காமல் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி அருகிலுள்ள வாய்க்காலில் விழுந்து நீரில் மூழ்கியது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவருக்கு (நியாஸ் , ஃபாரிஸ்) பலத்த காயம் ஏற்பட்டது . தகவலறிந்து வந்த அதிரை தமுமுக அவசர ஊர்தி மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அனுப்பிவைக்கப்பட்டது.