தமிழக தலைமை செயலகத்தில் முதன்மை செயலாளர் சண்முகம் அழைப்பின் பேரில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்த சென்றனர்.
மாலை 5மணியளவில் கூடிய அக்கூட்டத்தில் முதன்மை செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய கூட்டமைப்பினர்,குடியுரிமை சட்டத்திருத்தை தமிழகத்தில் அமல்படுத்தா மாட்டோம் என சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.
அதற்க்கு அரசு தரப்பில் பேசிய சண்முகம், இது குறித்து முதல்வரிடம் பேசிய பின்பு தகவல் தெரிவிப்பதாக கூறியதை அடுத்து அனைவரும் திரும்பி சென்றனர்.