CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக அதிரை ஜாவியா ரோட்டில் இன்று 8வது நாளாக ஷாஹீன் பாக் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் போராட்டத்திற்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் வருகை தந்து குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக கண்டன உரைகள் நிகழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிரை ஹாஜா நகர் மற்றும் கடற்கரைத்தெரு பொதுமக்கள் இணைந்து பேரணியாக புறப்பட்டு தொடர் போராட்ட களத்திற்கு சென்று ஆதரவு வழங்கினர்.
அதிரை ஹாஜா நகரிலிருந்து புறப்பட்ட பேரணி, ஈசிஆர் சாலை, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வழியாக ஜாவியா ரோடு தொடர் போராட்ட களத்தை அடைந்தது.
இப்பேரணியில் ஆண்கள், பெண்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.