Thursday, April 18, 2024

கேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் CAA-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் !

Share post:

Date:

- Advertisement -

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை (சி.ஏ.ஏ.) திரும்பப் பெற வலியுறுத்தி ராஜஸ்தான் மாநில சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா சட்டசபையில் முதன் முதலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் கேரளா அரசுதான் உச்சநீதிமன்றத்திலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த முதல் மாநிலம்.

இதனை பின்பற்றி காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கேரளாவை போல உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்திருந்தார்.

அத்தீர்மானத்தில், மத்திய அரசின் தீர்மானமானது அரசியல் சாசனத்தின் 14-வது சரத்துக்கு எதிரானது; மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறது இச்சட்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டசபையில் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...