Friday, March 29, 2024

பெரியார் பற்றி கருத்து சொல்லும்போது படிக்க வேண்டும் ரஜினிக்கு துணை முதல்வர் மறைமுக அறிவுரை…!

Share post:

Date:

- Advertisement -

பெரியாரை குறை சொல்பவர்கள், தீவிரமாக படித்து ஆராய்ந்த பின்னர் கருத்து சொல்ல வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.

தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற புத்தக கண்காட்சியின் நிறைவு விழா சென்னை நந்தனத்தில் உள்ள  ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் துனை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர், தந்தை பெரியாரின் உழைப்பால் தான் தன்னை போன்ற சாதாரண  மனிதர்கள் மிக உயர்ந்த இடத்திற்கு வர காரணம் என புகழாரம் சூட்டினார்.

பெரியாருக்கு எதிராக வந்த விமர்சனங்கள் எல்லாம் பொய்யாகிவிட்டதாகக் கூறிய ஓ.பன்னீர்செல்வம், பெரியாரை குறை சொல்பவர்கள், சமூக வளர்ச்சிக்காக அவர் எடுத்த முன்முயற்சிகளை தீவிரமாக படித்து ஆராய்ந்த பின்னர் கருத்து சொல்ல வேண்டும் என தெரிவித்தார். 
இளம் எழுத்தாளர்கள் தங்கள் சிந்தனைகளைக் கொண்டு மக்கள் நலனுக்காக செயல்படுவதை எந்த சூழ்நிலையிலும் நிறுத்தக்கூடாது எனவும் துணை முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...