மத்திய அரசு அமல்படுத்த துடிக்கும் NRC,CAA சட்டத்திற்கு எதிராக நாடெங்கிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் அனைத்து சமூதாய கூட்டமைப்பு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமை அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற இவ்வார்பாட்டம்,காவல்துறையினர் கெடுபிடிகளுக்கும் மத்தியில் சிறப்பாக நடந்தேறியது.
இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிக்காக துணை நின்ற அதிராம்பட்டினம், மதுக்கூர், மல்லிப்பட்டிணம்,முத்துப்பேட்டை, ஆவணம் உள்ளிட்ட ஊர்மக்கள் திரளான முறையில் வருகை புரிந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கடைசிவரை ஒத்துழைப்பு நல்கியமைக்கும், பட்டுக்கோட்டையில் வணிக நிறுவனங்களை அடைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்த வியாபார பெருமக்களுக்கும் இன்னும் இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிக்காக உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் அதிரையை சேர்ந்தவரான இப்ராஹிம் நன்றியை தெரிவித்து உள்ளார்.