அதிராம்பட்டினம் மரைக்காயர் பள்ளியில் நாளைய தினம் ஏற்பட உள்ள சூரிய கிரகணத்தை அடுத்து ஜமாத்துல் உலமா சபை ஏற்பாட்டின் பேரில் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளன.
இது குறித்து இன்று மஃரிப் தொழுகைக்கு பின்னர் அனைத்து பள்ளிகளிலும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் பங்கேற்று துஆ செய்ய உள்ளனர் அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தார்கள். நாங்களும் நுழைந்தோம். கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு ‘சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும் வரை பிரார்த்தியுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.