இந்திய அரசு அமல்படுத்தியுள்ள CAA மற்றும் அமல்படுத்த உள்ள NRC சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டங்கள் வலுத்துள்ளன.
இச்சட்டமானது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதியினருக்கும், அயல் நாட்டில் இருந்து தஞ்சம் அடைந்த முஸ்லீம்களுக்கும் குடியுரிமை இல்லை என கூறுகிறது. இதனை கண்டித்து நாடெங்கும் போராட்டம் அனல் பறக்கிறது.
இந்நிலையில் கனடாவில் வசிக்கும் தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து இந்திய தூதரகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். அதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு இந்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.