அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி முஹல்லா நிர்வாக கமிட்டி சார்பில் முக்கிய பொதுக்கூட்டம் இன்று மாலை 4.30 மணியளவில் கடற்கரைத்தெரு பெண்கள் மதரசாவில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் முஹல்லா நிர்வாகத்தால் இதுவரை நிறைவேற்றப்பட்ட செயல்திட்டங்கள் குறித்து நிர்வாகிகள் விளக்கி பேசினர். மேலும் எதிர்காலத்தில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மஹ்ரிப் தொழுகையினுடைய நேரம் வந்ததால், கூட்டத்திற்கு வந்திருந்த முஹல்லாவாசிகளுக்கு, நிர்வாகம் சார்பில் சிறிய அளவிலான குறிப்பேடு ஒன்று வழங்கப்பட்டது. அதில் முஹல்லாவாசிகள் தங்களின் குறைகளை எழுதி நிர்வாகத்திடம் ஒப்படைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் முஹால்லவாசிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கூட்டம் நடைபெற்ற பெண்கள் மதரஸா நுழைவுவாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனர் :