ராஜ்யசபாவில் பாஜகவுக்கு போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிமுக ஆதரவுடன் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியது.
ராஜ்யசபாவில் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த 11 அதிமுக எம்.பி. க்களில் ராணிப்பேட்டையை சேர்ந்த அதிமுக பிரமுகர் முகமது ஜானும் ஒருவர்.
இந்நிலையில் குடியுரிமை மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மசோதாவிற்கு ஆதரவாக அதிமுக எம்.பி. முகமது ஜான் வாக்களித்ததால், அவரை ராணிப்பேட்டை அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் காப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்து ராணிப்பேட்டை ஜமாத்தார்கள் அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.