தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
டெல்டா மாவட்டமான தஞ்சையிலும் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.
இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த கணக்கின்படி, கடந்த 24 மணிநேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் பதிவான மழை அளவு :
அதிராம்பட்டினம் – 82.50மிமீ
கீழ்அணை – 101மிமீ
வெட்டிக்காடு – 95.80மிமீ
பட்டுக்கோட்டை – 84.60மிமீ
நெய்வாசல் – 70.00மிமீ
வல்லம் – 69.00மிமீ
மஞ்சலாறு – 65.00மிமீ
கும்பகோணம் – 59.00மிமீ
பாபநாசம் – 57.00மிமீ
தஞ்சாவூர் – 55.00மிமீ
அய்யம்பேட்டை – 54.00மிமீ
பேராவூரணி – 52.00மிமீ
திருவையாறு – 50.00மிமீ
பூதலூர் – 48.00மிமீ
திருக்காட்டுப்பள்ளி – 48.00மிமீ