Saturday, April 20, 2024

தள்ளிப்போகிறதா உள்ளாட்சித் தேர்தல் ?

Share post:

Date:

- Advertisement -

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துளார் இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன்.

துணைத் தலைவர், துணை மேயர், ஆகிய பதவிகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தை மையமாக வைத்து அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால், உள்ளாட்சித் தேர்தல் மேலும் சில மாதங்களுக்கு தள்ளிப்போக கூடுமோ என விவாதம் உருவாகியுள்ளது.

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் துணை மேயர், துணைத்தலைவர் பதவியிடங்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கோரும் விவகாரத்தில் தமிழக அரசிடம் பலமுறை மனு அளித்தும் பதில் அளிக்கவில்லை என்பது இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசனின் வாதம்.

இந்நிலையில் செ.கு.தமிழரசன் மனுவில் குறிப்பிட்டுள்ள புகார் தொடர்பாக ஜனவரி 7-ம் தேதிக்குள் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், மாநில தேர்தல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...