மரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த வா.மு. முகம்மது முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் N. S. நெய்னா முகம்மது அவர்களின் மனைவியும், A. அலி அக்பர், A. அகமது ஹாஜா, A. அகமது ஜலீல், A. அகமது முகைதீன் ஆகியோரின் சிறிய தாயாரும், N.M.A. சாகுல் ஹமீது, N.M.A. அன்வர் ஹுசைன், N.M.A. ஃபிர்தெளஸ் கான் ஆகியோரின் உம்மம்மாவும், N.S. ரியாஸ் அகமது, N.S. அயூப் கான் ஆகியோரின் பெரியம்மாவும், N.S. பயாஸ் அகமது அவர்களின் பாட்டியாரும், N.S. அகமது தாசின் அவர்களின் தாயாருமாகிய மஹமூதா அம்மாள் அவர்கள் இன்று பகல் 12.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மஃஹ்ரிப் தொழுகைக்கு பிறகு கடற்கரைத் தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.