Saturday, April 20, 2024

சென்னையில் இருந்து புறப்படும் தீபாவளி சிறப்பு பேருந்துகளின் வழித்தட விவரம் !

Share post:

Date:

- Advertisement -

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் நாளை முதல் அக்டோபர் 26 வரை, 24 மணி நேரமும் மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து நாளை முதல் வழக்கமான பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இதன்படி 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தினமும் சென்னையில் இருந்து இயக்கப்படும் தலா 2,225 அரசு பேருந்துகளுடன் கூடுதலாக 3 நாட்களும் 4,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதன்படித்தான் 10,940 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு குறிப்பிட்டு இருந்தது.

சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் விவரம் :

கோயம்பேடு பேருந்து நிலையம் – மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், நாகர்கோவில், திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோவை, ராமநாதபுரம், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள்

மாதவரம் பேருந்து நிலையம் – ஆந்திராவுக்கு செல்லும் அனைத்து பேருந்துகள்

கே.கே. நகர் பேருந்து நிலையம் – ஈ.சி.ஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் – விக்கிறவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்

பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் – ஆற்காடு, ஆரணி, வேலூர், ஆம்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...