தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி கருத்தரங்கம் நடைபெற்றது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும்,விஞ்ஞானியுமான டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இளைஞர் எழுச்சி நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.இதில்
மாணவர்களுக்கிடையே அப்துல் கலாம் பற்றியான கருத்துரைகள் விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இமாம் ஷாபி(ரஹ்) மெட்ரிக்குலேசன் பள்ளி, பிரிலியன்ட் CBSE பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பள்ளி ஆகியவற்றில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
மேலும் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர்கள்,லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் சிறப்புரையாற்றினார்கள்.