அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் இன்று (12. 10. 2019) சனிக்கிழமை காலை டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது முகாமிற்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றத்தின் தலைவர் வ.விவேகானந்தம் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் முன்னிலை வகித்தார். ஷம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் பேராசிரியர். ஹாஜி எம்.ஏ.அப்துல் காதர் முகாமை துவக்கி வைத்தார், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த சேர்மன் வாடி, செக்கடிமேடு, கரையூர் தெரு, மேலத்தெரு, சிஎம்பி லைன், ஷிஃபா மருத்துவமனை, கடற்கரைதெரு, கடைத்தெரு மீன் மார்க்கெட் மற்றும் ஏரிப்புறக்கரை ஊராட்சியை சேர்ந்த பிலால் நகர் ஆகிய இடங்களில் 5200 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. முகாமில் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் சங்க செயலாளர எம்.எப். முஹம்மது சலீம், பொருளாளர் எம்.முத்துக்குமரன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.அஹமது அனஸ், என்.ஷேக்தம்பி, தூய்மை தூதுவர்கள் மேலத்தெரு என். முகம்மது மாலிக், கடற்கரை தெரு ஏ. அப்துல் மாலிக் மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்க பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீரை வழங்கினர்.